கண்களும் காதலும் ஐயோ ! இந்த கண்களை என்னதான் செய்வது இப்படிக் காட்டிக் கொடுக்கின்றதே என் காதலை
இடுகைகள்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்

இன்று feb14 காதலர் தினம் நீ திருமணத்தின் முன் சொன்னது போலவே என் கூடவே இருக்கின்றாய் இன்றைய நாளில் தட்டுத்தடுமாறி காலையில் என்னைக் குளிப்பாட்டினாய் உன் மூச்சில்தான் என் கூந்தல் துவட்டினாய் என் அருகே அமர்ந்து எனக்காய் உணவு சமைத்து உன் கையாலே ஊட்டிவிட்டாய் எனக்கே எனக்காக கவிதை செய்துதந்தாய் இப்போது இரவாகி விட்டது சற்று நேரம் முன்வரை பெரிய பெரிய இருமல்கள் இடையே என் மீதான காதலை எண்ணி எண்ணி மகிழ்ந்து உரைத்தாய் இப்போது என்ன ஆயிற்று உனக்கு? இறுதியாக உன் வை உரைத்த I LOVE U ... இந்த வார்த்தை என்ன நடந்தது உனக்கு ?.. நம் தள்ளாத வயதிலும் கொள்ளாமல் காதல் தந்தாயே இப்போது வைத்தியர் எனக்கென்று குறித்து வைத்த நாள் வரும் முன்னே என்னை மட்டும் தனியே விட்டு விட்டு எப்படி சென்றாய்? இதுதான் உன் காதலா ? உனக்கும் எனக்கும் ஓர் ஒப்பந்தம் உண்டு தானே யார் முன்னே போனாலும் உடன் கூட்டிச் செல்வதென்று இன்னும் நீ ஏன் என்னை அழைக்கவில்லை ? என்னால் மு..மு.முடியவில்லை.. ...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்

நீ சொன்ன மாடமாளிகை வேண்டாம் உன் மனது போதும் நான் குடியிருக்க நீ சொன்ன பென்ஸ்கார் வேண்டாம் சிறுவயது உப்புமூட்டை போதும் நான் நகர்ந்துசெல்ல நீ சொன்ன எந்த சாதனமும் வேண்டாம் உன் ஒற்றைப்பார்வை போதும் என்னை அழகுபடுத்த நீ விரித்த எந்த கம்பளமும் வேண்டாம் தார்ரோடு போதும் உன் கைகோர்த்து நடக்க இந்த மலர்ப்படுக்கை வேண்டாம் உன் நெஞ்சம் போதும் நான் தலை சாய்க்க நீ சொன்ன நூற்றாண்டும் வேண்டாம் ஓர் நாள் போதும் உன்னோடு வாழ