இன்று feb14 காதலர் தினம்
நீ திருமணத்தின் முன்
சொன்னது போலவே
என் கூடவே இருக்கின்றாய்
இன்றைய நாளில் தட்டுத்தடுமாறி
காலையில் என்னைக் குளிப்பாட்டினாய்
உன் மூச்சில்தான் என் கூந்தல் துவட்டினாய்
என் அருகே அமர்ந்து
எனக்காய் உணவு சமைத்து
உன் கையாலே ஊட்டிவிட்டாய்
எனக்கே எனக்காக கவிதை செய்துதந்தாய்
இப்போது இரவாகி விட்டது
சற்று நேரம் முன்வரை
பெரிய பெரிய இருமல்கள் இடையே
என் மீதான காதலை
எண்ணி எண்ணி   மகிழ்ந்து உரைத்தாய்

இப்போது என்ன ஆயிற்று உனக்கு?
இறுதியாக உன் வை உரைத்த
I LOVE U ...
இந்த வார்த்தை
என்ன நடந்தது உனக்கு ?..
நம் தள்ளாத வயதிலும்
கொள்ளாமல் காதல் தந்தாயே
இப்போது வைத்தியர்
எனக்கென்று   குறித்து வைத்த
நாள் வரும் முன்னே
என்னை மட்டும் தனியே விட்டு விட்டு
எப்படி சென்றாய்?
இதுதான் உன் காதலா ?

உனக்கும் எனக்கும்
ஓர் ஒப்பந்தம் உண்டு தானே
யார் முன்னே போனாலும்
உடன் கூட்டிச் செல்வதென்று
இன்னும் நீ ஏன் என்னை அழைக்கவில்லை ?
என்னால் மு..மு.முடியவில்லை..
நீ இல்ல உலகத்தில் தனித்திருக்க
நான்  கிழவிதான் வேறுசுகம் தேவைஇல்லை
என் ஆழ்சுகமே நீயல்லவா ....
எ ..என்னால் முடியவில்லை
தடுமாறுகிறேன்...
அழைத்துச்செல் கூடவே என்னையும்
அழைத்துச்செல்.....


என்னாயிற்று எனக்கு இப்போது
புன்சிரிப்புடன் என் முன்னே
நீங்களா ???
அப்படியானால்  என்னை அழைத்து வந்து விட்டீர்களா?
ஆமாம்  பின்னே நீ இன்னும் எனக்கு பதில் சொல்லவில்லையே?
என்ன பதில் ?
காதல் சொன்னேன் ரதியே 
உன்  பதில் என்ன ?
I  LOVE U
கிழவியை ரதி என்கிறீர்களே ?
உன் வயது மட்டுமா கூடும்
என் காதலும் தான் கூடும்
கிழவா இங்கேயும்  காதலா ??????

கருத்துகள்

  1. அருமையான கவிதை
    உணர்வுபூர்வமாக மனதை நெகிழ வைக்கும் ஒரு உண்மைக் காதலை என் கண்முன் கொண்டு வந்தது..

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்