புகையிரதம் வந்துவிடுமே என்று
கால்களிலே சக்கரத்தை கட்டிக்கொண்டு
வேகமாய் வியர்த்து வந்தேன்
அன்று உன் விழிச்  சக்கரத்தில்
மாட்டிக்கொள்ளப்போவது தெரியாமல்
நான்  வந்தும் வரவில்லை புகையிரதம்
வழக்கம் போல ஐந்து  நிமிடம்
அமரவைத்தது பிளாட்பார இருக்கையிலே
தலை சாய்ந்து அமர்ந்து இருந்தேன்
பின்னாலிருந்து ஒரு சங்கீதம்
கண் திறந்து பார்த்தேன்
செல்வோனை அடக்கிவிட்டு
என் அருகில் வந்து அமர்ந்தாய்
ஒற்றை பார்வையை என் மீது வீசிவிட்டு
உன் கற்றைக் குழலை வருடினாய்
சித்தம் கலங்கி உன் விழிச் சிறகில்
சிக்கி இருக்க என்னிடமே திரும்பி
ரெயின்லேட்டா ?என்றாய்
நான்தான் சொல்லி இருக்கவேண்டும் பதில்
சொல்ல விடவில்லை ஒலிபெருக்கி
அறிவித்துவிட்டது உனக்கான பதிலை
சின்னப் புன்னகையில் என்னை
கிறங்கடித்து திரும்பிவிட்டாய்
ரயில் வந்தால் நீசென்றுவிடுவாய் என்று 
ஐந்து நிமிடம் அரை மணிநேரமாகவாவது மாறட்டும் 
என்று மனதுக்குள் துதித்தேன் 
மனமிரங்கவில்லை கடவுள் 
ரெயிலும் வந்தது என் நண்பனும் வந்தான் 
ஆனால் நீ போகவில்லையே 
மாறாக எங்கள் அருகிலல்லவா வந்தாய் 
வந்தவள் அண்ணா என்றாய் என்னையல்ல
என் நண்பனை
உள்ளே சற்று வலித்தபோதும்
மச்சான் என்றுதான் அழைத்தேன் சின்னதாய்
ஒரு உரிமையோடு


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்